Skip to product information
1 of 1

Product Description

சாலப்பரிந்து | SAALAPARINTHU

சாலப்பரிந்து | SAALAPARINTHU

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 290.00
Regular price Sale price Rs. 290.00
Sale Sold out

Low stock

SAALAPARINTHU - நாஞ்சில்நாடனின் கதை என்பது கண்ணால் கண்ட காட்சியையோ காதல் கேட்ட செய்தியையோ மனதால் விரித்துகொண்ட கற்பனையையோ மட்டும் நம்பி எழுதப்பட்ட புனைவு அல்ல. மாறாக அவருடைய கதைகளின் சாராம்சத்தில் உள்ளுறைந்திருப்பது தொன்மையான ஒரு நிலமும், அதன் மொழியும் அவற்றின் தொகை விரிவான பண்பாட்டு செழுமையும் ஆகும். பின்னைப் புதுமையை தாவிப் பற்றும் நாட்டத்தால் உயிர்ப்பான மரபினின்றும் தன் வேர்களைத் துண்டித்துக் கொண்டு விடாத தன்மையால், காருண்யத்தை நீதியுணர்வை விழுமியங்களை வற்புறுத்தும் வகைமையால் தனித்து நிற்பவை இவரது கதைகள். நாஞ்சிலின் நாற்பது வருடத்துக்கு மேலான எழுத்து வாழ்வின் தடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இத் தொகுப்பில் அவருடைய ஆகச் சிறந்த கதைகள் இடம்பெற்றுள்ளன. நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள். நாஞ்சில் நாடன் தமிழில் விருது பெற்ற எழுத்தாளர்.
View full details