Skip to product information
1 of 1

Product Description

அறுந்த காதின் தனிமை | ARUNTHA KAADHIN THANIMAI

அறுந்த காதின் தனிமை | ARUNTHA KAADHIN THANIMAI

Publisher - KALACHUVADU

Language - தமிழ்

Regular price Rs. 90.00
Regular price Sale price Rs. 90.00
Sale Sold out

Low stock

ARUNTHA KADHIN THANIMAI - எமிலி டிக்கன்சன், குருதத், திருப்பூவனத்து பொன்னனையாள், அங்கம் வெட்டுண்ட பாணன், ஆஹா சாகித் அலி என மேற்கு கிழக்கும் முயங்கி நிறைவேறாமையின் வலியும் சுமையும் நிறைந்த சிலுவையோடு, கவிதைப் பாத்திரங்களாக அலையும் கடையைப் பூட்டிவிட்டு, தொல் தமிழ் மரபின் நூலிழைத் தோளில் இருந்து வெளியேறும். ஜெயபாஸ்கரனின் சித்திரம், இக்கவிதைகளில் சன்னமாகத் தெரிகிறது. கடையிலிருந்து வெளியேறும்போது, ​​வான்கோவின் மஞ்சளை எடுத்துச் செல்கிறார் ஜெயபாஸ்கரன். கடையில் அறையப்பட்ட இருப்பில், தான் புதைந்து நசிவதையும், கடையின் இருளையே கர்ப்பத்தின் பாதுகாப்பாக ஒசிந்து ஒழுகுவதையும், நமது தனிப்பட்ட பிரபஞ்சங்களின் சாயலோடு அடையாளம் காணச் செய்ததுதான் ஜெயபாஸ்கரனின் சாதனை. கடை, தன்னைப் பூட்டிக்கொண்டு ஜயபாஸ்கரனை வெளியேற்றிவிட்டது. ஜெயபாஸ்கரன் உருவகித்து வைத்திருந்த சின்னஞ்சிறு தனிப்பிரபஞ்சம், இத்தொகுப்பில் உள்ள உரைநடைக் கவிதைகள் வழியாக நீட்சியையும் நிறையவும் அடைந்துள்ளது. தமிழ் இலக்கிய மரபின் சுமையை இறக்க முயன்று, அந்த கர்ப்பப் பாதுகாப்பிலிருந்து வெளியேறி 'நவீன' கவிஞனாக, நெடுங்காலத்துக்குப் பிறகு உணர்ந்து, காலை எட்டிவைத்து இன்னொரு பயணம் தொடங்கியவனின் கதை இந்தக் கவிதைகள்.
View full details