கொரோனாவின் வருகை ஒரு சுனாமி அலையைப்போன்று எங்கோ தொலைவில் கடலில் ஒரு மெல்லிய நீலக்கோடாக முதலில் எழுந்தது. அது வான் நோக்கி உயர்ந்து உயர்ந்து அந்த நீலச் சுவர் கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் இருக்கும் கரை நோக்கி வந்துவிட்டது. நம் வாழ்வை முழுமையாக எடுத்துக்கொண்டது. நமது காலடியில் நமது நிலங்கள் அப்போது நகர்ந்துகொண்டிருந்தன. இந்தக் கவிதைகளில் இந்தக் காலத்தின் பேய்க்கனவுகளை கொரோனாவின் முதல் புள்ளியிலிருந்து இந்த லாக்டவுன் காலத்தளர்வுகள் வரை விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது என்பது ஒரு கற்பிதம் மட்டுமே. நாம் அவ்வளவு எளிதில் திரும்பமுடியாத இந்த இருள்வழியில் எங்கோ திகைத்து நின்றுகொண்டிருக்கிறோம்.
வசந்தம் வராத வருடம் | VASANTHAM VARATHA VARUDAM
வசந்தம் வராத வருடம் | VASANTHAM VARATHA VARUDAM
Author - Manushyaputhiran/மனுஷ்ய புத்திரன்
Publisher - UYIRMMAI
Language - TAMIL
Regular price
Rs. 830.00
Regular price
Sale price
Rs. 830.00
Unit price
/
per
Share
Low stock