மானுட வாழ்வின் அச்சுறுத்தும் படுபயங்கர துயரங்களை, அன்பின் மகத்துவத்தை, மானுட எதிர்பார்ப்பை மிக மோசமான அச்சுறுத்தும் கொடூரங்களை அனுபவிக்காத மனிதனால் உணரவே முடியாது. அப்படி உணர வேண்டுமானால் அதன் இருண்ட குகைகளுக்குள் செல்ல நீங்கள் இந்த சிறுகதைகளை பார்ப்பதன் வழியே சாத்தியப்படுத்தலாம. கரன் கார்க்கியின் சிறுகதைகள் அப்படியான இருண்ட குகைகளை, அன்பின் அரவணைப்பை பேசுகிறது.
கரன் கார்க்கியின எழுத்துக்கள் எளிய மக்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டுகிறது. சமூக உறவுகளின் உள்ளார்ந்த அரசியலை, மனிதகுலத்தின் தீவிர பிரச்சனைகளை அழுத்தமாகச் சொல்லிச் செல்கிறது.